Home இந்தியா தமிழகத்தை சுற்றி வளைக்கும் கொரோனா – மேலும் 74 பேருக்கு கொரோனா…

தமிழகத்தை சுற்றி வளைக்கும் கொரோனா – மேலும் 74 பேருக்கு கொரோனா…

by admin

தமிழகத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்  இன்று மேலும்  74 பேருக்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.  3 பேர் பலியாகி உள்ளனர்.  என   சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இன்று  கருத்து வெளியிட்டுள்ள பீலா ராஜேஷ்  “கொரோனா பாதிப்பு உறுதியான 74 பேரில் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் 73 பேர் ஆகும். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இப்படி வேகமாக கொரோனா பரவுவது குறித்து விசாரிக்க தேசிய தொற்றுநோய் இன்ஸ்டியூட் மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். விழுப்புரம் மற்றும் தேனியில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் தேனியில் உயிரிழந்த பெண்மணியின் கணவர் மற்றும் மகன் இருவரும் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள். அவர்கள் மூலமாக இந்த பெண்மணிக்கும் நோய் பரவியது. இந்த நோய் எப்படி எப்படி மாறுகிறது என்பதை கணிப்பது கடினமாக உள்ளது. எனவேதான் வீட்டிலேயே இருங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.” என  பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More