Home இந்தியா கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம் – பாதிப்பு 4421 ஆக உயர்வு

கொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5 பேர் மரணம் – பாதிப்பு 4421 ஆக உயர்வு

by admin

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 4281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. 325 பேர் குணமடைந்துள்ளனர்.  #கொரோனா  #இந்தியா #மரணம்  #பாதிப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More