Home இந்தியா கொரோனா – பிரித்தானியாவில் மரணிக்கும் இந்திய – இலங்கை மருத்துவர்கள்….

கொரோனா – பிரித்தானியாவில் மரணிக்கும் இந்திய – இலங்கை மருத்துவர்கள்….

by admin

பிரித்தானியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு இந்திய மருத்துவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆபத்தான நிலையில் 5 மருத்துவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான 62 வயதான ஜித்து என்ற ஜிதேந்திர ரத்தோட் என்பவரும் இலங்கையைச் சேர்ந்த 70 வயதுடைய வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை என்பவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான கம்சா பச்சேரி என்னும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இவர் லண்டனிலுள்ள பேர்மிங்காமில் வசித்து வந்துள்ளார்.

இவர்கள் தவிர மேலும் 5 வைத்தியர்கள்  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்படி தகவலை வெளியிட்ட பிரித்தானியாவில்  உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ரமேஷ் மேத்தா “இதுவரை உறுதியாக தெரிந்தவர்கள் 5 பேர்தான் இன்னும் பலர் இருக்கக்கூடும்” எனவும்  அச்சம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மத்தியில் மருத்துவர்கள், களப் பணியாற்றச் செல்வது, போருக்கு புறப்பட்டு செல்வது போன்றுதான் இருக்கிறது எனத் தரிவித்த அவர் இதை அறிந்தே மருத்துவர்கள் மனிதநேய அர்ப்பணிப்புடனும் தியாக மனப்பான்மையுடனும் பணியாற்ற விரும்பியே,  பிரித்தானியாவின்  தேசிய சுகாதார பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார் . #கொரோனா #பிரித்தானியாவில் ,மரணிக்கும் #மருத்துவர்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More