Home உலகம் பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 953 பேர் பலி. மற்றுமொரு கறுப்பு நாள் பதிவாகியது.

பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 953 பேர் பலி. மற்றுமொரு கறுப்பு நாள் பதிவாகியது.

by admin


பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் இறப்பு எண்ணிக்கை 953 அதிகரித்துள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த இறப்பு 8,931 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் இங்கிலாந்தில் 866 புதிய இறப்புகளும், ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 87 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுகையின் உச்ச இறப்புகள் ஏப்ரல் 8ல் 938 ஆகவும், ஏப்ரல் 9ல் நேற்று 881 ஆகவும் இருந்தன. எனினும் இன்று 953 ஆக உயர்ந்து மற்றும் ஒரு கறுப்புநாள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில், 24 மணிநேரத்தில் இத்தாலியின் உச்ச இறப்பாக 919ம் ஸ்பெயினின் உச்ச இறப்பாக 950 என்ற எண்ணிக்கைகளும் முன்னர் பதிவாகி இருந்தன. எனினும் அந்த நாடுகளின் கொடிய நாட்களை இப்போது பிரித்தானியா கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More