Home உலகம் கொரோனா சரியானபின் அது ஏற்படுத்த போகும் தாக்கம் மிக மோசமாக இருக்கும்

கொரோனா சரியானபின் அது ஏற்படுத்த போகும் தாக்கம் மிக மோசமாக இருக்கும்

by admin

BBC

 

கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, “தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்,” என்று எச்சரிக்கிறார்.

“இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.” என்று நோம் சாம்ஸ்கி ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்.

"அதீத அதிகாரத்தை கைப்பற்ற கொரோனாவைரஸை அரசுகள் பயன்படுத்தும்" - எச்சரிக்கும் வல்லுநர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதுபோல எட்வர்ட் ஸ்னோடென் கொரோனா வைரஸை பயன்படுத்தி உலகெங்கும் அரசுகள் அதீத அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்யும் என எச்சரிக்கிறார்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறை ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட்டார்.

"அதீத அதிகாரத்தை கைப்பற்ற கொரோனாவைரஸை அரசுகள் பயன்படுத்தும்" - எச்சரிக்கும் வல்லுநர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அவர், “இந்த கொரோனாவை பயன்படுத்தி அரசுகள் நம்மை முன்பு எப்போதும் இல்லாததைவிட மிக அதிமாக கண்காணிக்கின்றன,” என்று அவர் தெரிவிக்கிறார்.

இவர் ஒரு பக்கம் என்றால் கொரோனா வைரஸால் பொருளாதாராம் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிதையும் என எச்சரிக்கிறது சர்வதேச் நாணய நிதியம்.

90 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பொருளாதாரப் பெருமந்தம்

உலக அளவில் பல செயல்பாடுகளை கொரோனா வைரஸ் முடக்கிவிட்டது. இந்த ஆண்டில் சர்வதேச வணிகத்தில் பெரிய சரிவு இருக்கும் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.) கணித்துள்ளது.

"அதீத அதிகாரத்தை கைப்பற்ற கொரோனாவைரஸை அரசுகள் பயன்படுத்தும்" - எச்சரிக்கும் வல்லுநர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆண்டில் உலக வணிகம் 13 முதல் 32 சதவீதம் வரை சரியும் என்று உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நெருக்கடியில் நிச்சயமற்ற நிலை இருப்பதற்கான பரவலான சாத்தியக்கூறுகள் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளன.

ஒரு பதிற்றாண்டு காலத்துக்கு முன்னதாக நிகழ்ந்த வாணிப மந்த நிலையில் ஏற்பட்டதைவிட அதிகமான வர்த்தக சரிவு இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சரிவை மிகக் குறைவாக கணித்தாலும், 90 ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதாரப் பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவுக்கு இது இருக்கலாம், ஆனால் இப்போது குறுகிய காலக்கட்டத்துக்குள் அது நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   #கொரோனா #நோம்சாம்ஸ்கி #சர்வாதிகாரம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More