காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கங்கொடவில நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இன்று (14) நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவ்வாறு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது #ரஞ்சன்ராமநாயக்க #விளக்கமறியல்
Spread the love
Add Comment