Home இலங்கை அரச நிறுவனங்களின் பணிகள் அடுத்த வாரம் பகுதியளவில் ஆரம்பமாகவுள்ளன…

அரச நிறுவனங்களின் பணிகள் அடுத்த வாரம் பகுதியளவில் ஆரம்பமாகவுள்ளன…

by admin


அதிஅபாய வலயங்களிலுள்ள அரச நிறுவனங்களில் 20 வீதமான சேவையை அடுத்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் 50 வீதமான சேவையை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி குறிப்பிட்டார். கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ள அரச நிறுவனங்களின் குறைந்தளவான ஊழியர்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவுள்ளன. அதேவேளை, சேவை நேரத்திற்குள் வெவ்வேறு நேரங்களில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். இந்த காலப்பகுதிக்குள், அத்தியாவசிய சேவைக்கு முன்னுரிமை வழங்கப்டவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கான சுற்று நிரூபம் விரைவில் வௌியிடப்படும் என பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More