Home உலகம் கனடாவில் துப்பாக்கிச்சூடு 17 பேர் உயிரிழப்பு

கனடாவில் துப்பாக்கிச்சூடு 17 பேர் உயிரிழப்பு

by admin

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின்; வடக்கு பகுதியில் உள்ள நோவா ஸ்காட்டியா நகரில் காவல்துறையினர் போன்று உடையணிந்து வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குறித்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் 51 வயதான கப்ரியல் வோர்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் சுட்டு கொன்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடாவில்  இடம்பெற்ற  மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #கனடா #துப்பாக்கிச்சூடு   #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More