Home இலங்கை 100 கோடி நஷ்டஈடு கோரிய அங்கஜன்

100 கோடி நஷ்டஈடு கோரிய அங்கஜன்

by admin

“கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ” என  யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் அங்கஜன் இராமநாதனையே குறிப்பிட்டுள்ளதாக கூறி , குறித்த பத்திரிக்கைக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி  ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , 
 

  யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் முன் பக்கத்தில் கடந்த 20ஆம் திகதி “கொடையாளர்களின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி” என தலைப்பு செய்தி  வெளியாகி இருந்தது. அந்த தலைப்பு செய்திக்கு அருகில் கொடையாளர் நிவாரணத்தை அங்கஜனுக்கு அனுப்புங்கள் என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரரான  கூல் தெரிவித்தார் எனும் செய்தியையும் பிரசுரித்துள்ளார்கள்.

அதனை பார்க்கும் போது அங்கஜயன் அரச சொத்தை களவாடுகின்றார் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.  அது தொடர்பில் அங்கஜன் மறுப்பறிக்கை விட்டார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? என நாம் கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
அந்த செய்திக்கு பயன்படுத்தப்பட்ட படம் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவடைய முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது  அதனூடாகவே அது பொய்யான குற்றசாட்டு என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல யாழ்.மாவட்ட செயலர்  கூட அதனை மறுத்துள்ளார்.
இதானல் இன்று  குறித்த பத்திரிக்கையிடம் நஷ்ட ஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். அதில் எமக்கு 1 பில்லியன் ரூபாய் அதாவது 100 கோடி ரூபாய் நஷ்ட தர வேண்டும் என கோரியுள்ளோம். அந்த கடிதம் கிடைக்கப்பெற்று  14 நாட்களுக்குள் எமக்கு அந்த தொகையை தராவிடின் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம். என தெரிவித்தார்.
அதன் போது , ஊடகவியலாளர் ஒருவர் , அந்த செய்தியில் பெயர் குறிப்பிடப்படவில்லை. “அதிகாரமிக்க அரசியல்வாதி” என குறிப்பிடப்பட்டு உள்ளது. அங்கஜன் இராமநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , அதே நேரம் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் உள்ளார் , அத்துடன் வேறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளனர். இந்நிலையில் அந்த செய்தியில் குறிப்பிட்ட “அதிகாரமிக்க அரசியல்வாதி ” அங்கஜன் இராமநாதன் என தாங்கள் முடிவுக்கு வந்தமைக்கு ஏதுவான காரணம் உண்டா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளிக்கும் போது , தலைப்பு செய்திக்கு அருகில் கூலின் கூற்றும் வெளியிடப்பட்ட போது,  சாதாரண அறிவு கொண்ட , முதலாம் ஆண்டு படிக்கும் , எழுதபடிக்க தெரிந்த  எவருக்கும் இரண்டு செய்திகளையும் வாசிக்கும் போது பெயர் குறிப்பிடாத அந்த அரசியல்வாதி யார் என தெரியும்.   இவ்வாறான பொய்யான செய்திகளை விசாரிக்காமல் பிரிசுரித்தால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி வரும் என மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். என பதிலளித்துடன் , வேறு கேள்வி கேளுங்கள் என கூறினார்.
அதன்போதும் மீண்டும் ஊடகவியலாளர் , ” ஆட்டையை போட்டதாக” வெளியிடப்பட்ட செய்திக்கு அருகில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் கூல் அங்கஜன் இராமநாதனின் பெயர் குறிப்பிட்டு கூறிய கூற்று செய்தியாக வெளிவததால் தான் , பெயர் குறிப்பிடப்படாத ” ஆட்டையை போட்ட ” எனும் செய்தி அங்கஜன் இராமநாதன் தான் என முடிவுக்கு தாங்கள்  வந்தீர்கள். கூல் கூறியதாக வெளியான செய்தி பத்திரிகையில் வேறு இடத்தில் பிரசுரமாகி இருந்திருந்தால் , ” ஆட்டையை போட்ட ” எனும் செய்திக்கும் அங்கஜன் இராமநாதனுக்கும் தொடர்ப்பில்லை எனும் முடிவுக்கு வந்திருப்பீர்களா ? என கேள்வி எழுப்பிய போது ,
அப்படி செய்தி வெளியாகி இருந்திருந்தால் , அந்த நேரம் அந்த செய்திகளை மக்கள் எவ்வாறு விளங்கிக்கொண்டார்கள் என பார்த்து எங்கள் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கலாம் என பதிலளித்தார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? என கேள்வி எழுப்பிய போது ,அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். தேர்தல் ஆணையாளருக்கு அது தொடர்பில் எழுத்தில் முறையிட்டு உள்ளோம். இன்னும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் அதுக்கு பதிலளிக்கவில்லை என பதிலளித்தார்.  #அங்கஜன்  #நஷ்ட ஈடு  #அரசியல்வாதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More