Home இந்தியா தமிழ்நாட்டில்  121 பேர் கொரோனா தொற்றார்களாக, இன்று இனம்காணப்பட்டனர்…

தமிழ்நாட்டில்  121 பேர் கொரோனா தொற்றார்களாக, இன்று இனம்காணப்பட்டனர்…

by admin

தமிழ்நாட்டில்  121 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்   நோய் தொற்று உள்ளவர்களின்  எண்ணிக்கை நேற்று 809ஆக இருந்த நிலையில், இன்று 902ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களில் 80 பேர் ஆண்கள். 41 பேர் பெண்கள்.

கொரோனோவிலிருந்து குணமடைந்து 27 பேர் வெளியேறியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது. 68 வயது நபர் ஒருவர் இன்று தனியார் மருத்துவமனையில் இந்நோயால் உயிரிழந்துள்ளார். ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 12 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கள்ளக்குறிச்சியில் 3 பேரும் நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் காஞ்சிபுரத்தில் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகள் யாரும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More