Home இலங்கை ஹட்டன் நகரில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஹட்டன் நகரில் 13 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by admin

(க.கிஷாந்தன்)

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் வழங்கு தொடுக்கப்படவுள்ளது. தண்டனை சட்டத்தின் 264 ஆவது பிரிவுக்கமையவே ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கள் வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹட்டன் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொதுசுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். இதன்போதே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் என கடந்த 24 ஆம் திகதி வர்த்தகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலானவர்கள் அவற்றை மீறும் வகையில் செயற்படுவதை காணமுடிகின்றது.  #ஹட்டன்  #சட்டநடவடிக்கை #சுகாதாரநடைமுறை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More