Home இந்தியா 50 முன்னணி தொழிலதிபர்கள் பெற்ற 68,607 கோடி ரூபா கடன்கள் தள்ளுபடி

50 முன்னணி தொழிலதிபர்கள் பெற்ற 68,607 கோடி ரூபா கடன்கள் தள்ளுபடி

by admin

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெ{ஹல் சோக்ஸி , நிரவ் மோடி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் தங்களது நிறுவனங்களின் பெயரில் பெற்ற 68,607 கோடி ரூபா மதிப்பிலான கடன்களின் கணக்குகள்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் திகதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தமைக்கு ஆர்பிஐ வழங்கிய பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் திகதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெ{ஹல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற 5,492 கோடி ரூபா கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற 1,447 கோடி ரூபா , 1,109 கோடி ரூபா கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற.4,314 கோடி ரூபா மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற 1,943 கோடி ரூபா கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் 2,850 கோடி ரூபா கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபர்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆர்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது. #தொழிலதிபர்கள்  #கடன்கள் #தள்ளுபடி  #விஜய்மல்லையா #நிரவ்மோடி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More