Home இலங்கை கசிப்பும் கோடாவும் உடமையில் வைத்திருந்த 5 பேர் கைது

கசிப்பும் கோடாவும் உடமையில் வைத்திருந்த 5 பேர் கைது

by admin

தென்மராட்சியில் சட்டத்துக்கு புறம்பான கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட  காவல்துறை   நடவடிக்கையில் 3 இடங்களில் 10 லீற்றர் கசிப்பும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெருடாவில், மட்டுவில் மற்றும் சரசாலையில் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதைத் தடுப்பு  காவல்துறை பிரிவினரால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பெரும் சாவகச்சேரி  காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மீட்கப்பட்ட 10 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும்  காவல் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. #கசிப்பு   #கைது  #கெருடாவில் #மட்டுவில்   #சரசாலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More