Home இலங்கை சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

by admin

(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30.04.2020)  மாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன்  காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை நேற்று மாலை 6.30 மணியளவில் சுற்றிவளைத்தனர்.

காவல்துறையினரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கான தேடுதல்   தொடர்கின்றது. சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும்  காவல்துறையினர்கைப்பற்றினர்.

கைதானவர்கள் இன்றைய தினம் (01.05.2020) ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.  நாவலப்பிட்டிய நகரசபையானது ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  #நாவலப்பிட்டிய  #நகரசபைதலைவர் #சூதாட்டம் #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More