Home இலங்கை கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

by admin

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முன்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடல்களும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த முதியவர் இருவர் நேற்று முந்தினம் உயிரிழந்திருந்தனர். அதில் உயிரிழந்த குணசிங்கபுர பகுதியை சேர்ந்த 80 வயதான யாசகம் செய்தவரான வேலு சின்னத்தம்பி என்பவருக்கு கொரோனா தொற்று இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதனையடுத்து அவரது உடல் முல்லைத்தீவு குமாரபுரம் மாவடிப்புலவு இந்து மாயானத்தில் எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு முல்லைதீவைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சனநடமாட்டம் இல்லாத முள்ளியவளை களிக்காடு காட்டு பகுதியில் எரிப்பதற்காக முடிவெடுக்கப்பட்டு குறித்த முதியவரது உடல் களிக்காடு காட்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது.

அதேவேளை உயிரிழந்த மற்றய முதியவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு அவரது உடலும் கொண்டுசெல்லப்பட்டு இருவரதும் உடல்களும் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டன.  #கேப்பாப்புலவு  #தனிமைப்படுத்தல்முகாம்  #தகனம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More