Home இலங்கை கொரோனா ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை

கொரோனா ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை

by admin

கொரோனா ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களடான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 10.30 அளவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமான இந்த சந்திப்பின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கொரோனா தொற்றை ஒழிப்பது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளனர்.

இதன்போதே கொரோன வைரஸ் ஒழிப்பிற்காக சர்வதேச நிதி உதவி கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் உலக வங்கி 127 அமெரிக்க மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு இணங்கியுள்ள போதிலும் இதுவரை அது கிடைக்கவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல தௌிவுபடுத்தினார்.

பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி , மஹஜன எக்சத் பெரமுன, பிலிதுரு ஹெல உருமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது #கொரோனா  #நிதிஉதவி #மகிந்த ராஜபக்ஸ

  •  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More