பங்களாதேசில் பணிபுரியும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்துறை ஒன்றில் பணியாற்றி வரும் 48 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பங்களாதேசில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 186 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #பங்களாதேசில் #இலங்கையர் #கொரோனா
Spread the love
Add Comment