Home இலங்கை இந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று அழைத்து வரப்படுகின்றனர்

இந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று அழைத்து வரப்படுகின்றனர்

by admin

இந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று (12) அழைத்துவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலயங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை சுமார் எழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 450 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 279 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #இந்தியா  #இலங்கையர்கள்  #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More