Home இலங்கை ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை இரத்து – மீண்டும் விளக்கமறியல்…

ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை இரத்து – மீண்டும் விளக்கமறியல்…

by admin

வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு மேல்  நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் கடத்தல் தொடர்பான  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்  உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ராஜித சேனாரத்னவை 500,000 ரூபாய் பெருமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டிருந்தார். எனினும், பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சட்டமா அதிபர் கடந்த ஜனவரி 08 ஆம் திகதி திருத்த விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்  அந்த  திருத்த விண்ணப்பம் இன்று (புதன்கிழமை) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More