79
ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மதுபானசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று முதல் மதுபானசாலைகள் திறக்கப்படும் என மதுவரித்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் அனுமதிப்பத்திரம் வைத்துள்ள பல்பொருள் அங்காடிகளில் மதுபானசாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்களம் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. #ஊரடங்கு #மதுபானசாலைகள்
Spread the love