Home இலங்கை யாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்…

யாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்…

by admin

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான றோய் டிலக்சனின் ஆதனத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை (22.05.2020) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டிக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கின்றது.

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் றோய் டிலக்சனின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சன் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.

க.சுகாஷ்,
செயலாளர்,
சட்டத்தரணிகள் சங்கம்,
மல்லாகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More