Home இந்தியா புலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….

புலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….

by admin

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்க இடம் கொடுத்து உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் தீரத்தபதி (89) உடல் நலக்குறைவால் நேற்று (24.05.20) இரவு உயிரிழந்துள்ளார்.

 

இவர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காகப் பயிற்சி முகாம்கள் அமைக்க முயன்ற காலத்தில் இடம்தந்து உதவ முன்வந்தவர் என தி.மு.க. செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவருடன் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்திலிருந்து அறிமுகம்.  கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டப் பேரணியை காவல்துறையினர் தாக்கிய போது சேலம் லூர்துநாதன், என்னும்  மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதுகுறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

கடந்த 1983 ஈழப் பிரச்னை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு முயன்றது

இவருடைய சிங்கம்பட்டி எஸ்ரேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடமென நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம், நானும் சென்று அவரைப் பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது என   தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்த போது எங்களிடம் , ஒரே வாகனம் தான் இருந்தது. எங்களோடு இந்திய முன்னாள் இராணுவ வீரர்கள் ச.அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

2004 இல் நிமிர வைக்கும் நெல்லை என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு, நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் #விடுதலைப்புலிகள் #பயிற்சிமுகாம்  #சிங்கம்பட்டிஜமீன்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More