Home இலங்கை புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by admin


புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை சாரதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்றறு ஏற்பட்டுள்ளதாக இனர் காணப்பட்டதனையடுத்து இவ்வாறு அங்கு தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடற்படை வீரருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கட்டிடம் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டது எனவும் அங்கு சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. #புறக்கோட்டை   #கபூர்கட்டிடம்  #தனிமை  #கடற்படை  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More