Home இலங்கை கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி

by admin

கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஆலயம் தொடர்பாக  வழக்கினை  கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை  விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்த மனுவில் உள்ள குறைபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை(2)  வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம்  சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன்  சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆகியோர் ஆதரவாக முன்னிலையாகியிருந்தனர்

கடந்த 2018ம் ஆண்டு  கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப  பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில்    வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 
அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில்  பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதணன் ஆகியோர்  முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. #கல்முனை  #ஆலயவழக்கு #தள்ளுபடி
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More