Home இலங்கை இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்:

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த தந்தை -மகள் மடு காவல்நிலையத்தில் சரண்:

by admin

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு காவல் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்;படுத்தப்பட்டுவருகின்றனர்.

இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று திங்கட்கிழமை (1) அதிகாலை 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய அவரது மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.

வருகை தந்த இருவரையும் 33 வயதுடைய நபரின் தந்தையார் மடு காவல்துறைப் பிரிவிற்குற்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்

தற்போது ‘கொரோனா’ காலம் என்பதால் இந்தியாவில் இருந்து வந்த மகன் மற்றும் மகனின் மகள் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு மடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலும்; அழைத்துச் சென்ற நபர் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன் படகு மூலம் வந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் கைது செய்த மடு காவல்துறையினர் விசாரணைகளை செய்து வருகின்றனர்.

விசாரணைகள் முடிந்தவுடன் குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #இந்தியா #தந்தை #மகள்  #சரண்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More