Home இலங்கை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

by admin


நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்ட 40 பேரில் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் ஏழு பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய ஒருவர் கடற்படையுடன் நெருங்கிப் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #அதிகரிப்பு #சவேந்திரசில்வா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More