Home இலங்கை யாழ், கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய காணிகள் -அங்கஜன் – சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு.

யாழ், கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய காணிகள் -அங்கஜன் – சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு.

by admin

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு.

1) கிளிநொச்சி ஆனைவிழுந்தான் வயற் காணி

2) கிளிநொச்சி ஜெயபுரம் தேவன்குளம் வயற் காணி

3) வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், நாகர்கோவில் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தபட்டமை

4) சரசாலை குருவிக்காடு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இடப்பட்ட எல்லைக்கல்

குறித்த சந்திப்பின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய காணிகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. மேற் குறித்த காணி விடையங்கள் தொடர்பில் அமைச்சரிடம் பேசப்பட்டதுடன், மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினை தொடர்பில் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு அங்கஜன் இராமநாதனால் எழுத்து மூலமாக கடிதமும் சகல ஆவணங்களும் வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பு இன்று (02) பிற்பகல் அமைச்சரின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. அதன் போது   அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோர் வடக்கு மக்களின் நீண்ட கால இக் காணி பிரச்சினைகள் தொடர்பில் விவரமாக ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம், நாகர்கோவில், சரசாலை குருவிக்காடு மற்றும் கிளிநொச்சி ஆனைவிழுந்தான், ஜெயபுரம் வடக்கு மக்களின் வயற் காணிகள் சம்பந்தமான விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு அங்கஜன் இராமநாதனால் குறித்த இச் சந்திப்பில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுண்டிக்குளம், நாகர்கோவில் பகுதியில் 2015 மற்றும் 2016ம் ஆண்டு காலப்பகுதயில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதிகளாக வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன. இதனால் குறித்த பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வணக்கஸ்தலம், தொழில் நிலையங்கள், இறங்குதுறைகள் குறித்த பிரதேசங்களிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் மற்றுமொரு கிராம சேவையாளர் பிரிவின் ஒரு பகுதியும் குறித்த பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் குறித்த பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் மற்றும்  ஜெயபுரம் வடக்கு பகுதியில் 528 குடும்பங்களிற்கான வயல் நிலங்கள் விடுவிப்பது தொடர்பிலும் 35 வருடங்களிற்கு மேலாக தொடர்ந்து வந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், எழுத்து மூலமாக சகல ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மக்கள் தொடர்ந்து யுத்தம் காரணமாக செய்கை நிலங்களை பராமரிக்க முடியாது போனது. இந்த நிலையில் குறித்த பகுதிகள் வனவள பாதுகாப்பு திணைக்களம் தம்வசப்படுத்தியது.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆனைவிழுந்தான் பகுதியில் செய் காணிகளை துப்பரவு செய்து கொண்டிருந்த போது வனவள திணைக்கள அதிகாரிகளால் பிரதேச மக்களை கைது செய்ய முற்பட அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததை அடுத்து குறித்த காணி விடயம் உள்ளடங்கலாக மேலும் பல காணி சர்ச்சை விடையங்களை உள்ளடக்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று அமைச்சருடன் குறித்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் இவ்வாறான மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறித்த விடையங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இன்று அமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். குறித்த சந்திப்பில் இக் காணி சர்ச்சைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அவர் குறித்த விடையங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

விரைவில் குறித்த பிரச்சினைகளிற்கு தீர்வு எட்டப்பட்டு மக்கள் தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கும், வாழ்வாதார தொழில்களை தடையின்றி மேற்கொண்டு வாழ்கையில் முன்னேறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். குறித்த விடையம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று எம் மக்களிற்கு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #யாழ்ப்பாணம்  #கிளிநொச்சி ,#அங்கஜன்  #வனஜீவராசிகள்திணைக்களம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More