Home இலங்கை நயினாதீவு திருவிழா 30 அடியவர்களுடன் மட்டும் -அன்னதானத்துக்கு தடை

நயினாதீவு திருவிழா 30 அடியவர்களுடன் மட்டும் -அன்னதானத்துக்கு தடை

by admin
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இவ்வருடவருடாந்த உற்சவத்தை நயினாதீவில்உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அன்னதானத்துக்கும் தடை எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன்ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதன்போது நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலய உற்சவத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு யாழ்மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.  எனவே இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளிஇடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அதேவேளை தேர்,சப்பறஉற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.   #நயினாதீவு #நாகபூசணிஅம்மன்   #அடியவர்கள் #அன்னதானம்  #தடை
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More