Home இலங்கை பேசாலை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு

பேசாலை கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு

by admin
மன்னார் பேசாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுpயில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை காவல்துறையினர்ர்  மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை மீட்டுள்ளனர்.
பேசாலை காவல்துறை பிரிவுக்குற்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள்  தொடர்பாக பேசாலை பதில் காவல்துறை பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து மன்னார்  நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த  நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தின் உத்தரவினைப் பெற்ற பேசாலை காவல்துறையினர் ,படைத்தரப்பினர் மற்றும் விசேட அதிரடிப் படைப்பிரிவு நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொண்ட அகழ்வுப் பணியில் மீட்கப் பட்ட சந்தேகப் பொதி பரிசோதனைக்கு உற்;படுத்தப்பட்ட போது குறித்த பொதியில் காணப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் மூன்றும் அதனோடு கூடிய உதிரிப்பாகங்களும் அடையாளப்படுத்தப்பட்டு பேசாலைப் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் 2007ஆம் ஆண்டு யுத்த காலத்திற்குட்பட்டது என பேசாலை உதவி காவல்துறைபொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார். மேலதிக விசாரனைகளை பேசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.#பேசாலை  #கடற்கரை, #தொலைத்தொடர்புசாதனங்கள் #மீட்பு
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More