Home உலகம் அமெரிக்காவுக்கு சுவிட்சலாந்து கண்டனம்

அமெரிக்காவுக்கு சுவிட்சலாந்து கண்டனம்

by admin

சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் மீது தடைவிதித்துள்ளமை தொடர்பில் அமெரிக்காவுக்கு சுவிட்சலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தநிலையில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
இந்த போரின்போது அமெரிக்காவின் சி.ஐ.ஏயினால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு காவல் மையங்களில், போர் கைதிகளை அமெரிக்க ராணுவம் சித்திரவதைகள் செய்ததாக முறைப்பாடுகள் செய்யப்பட்டதனையடுத்து இது தொடர்பாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

இந்ந நிலையில் இந்த விசாரணை நடத்துகிற அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளார்.  இந்த உத்தரவானது, சர்வதேச நீதிமன்ற அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதை தடுக்கவும் வழிவகை செய்துள்ள நிலையில் இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த முடிவு, சட்டத்தின் ஆட்சியில் தலையிடுவதற்கான முயற்சி என கருத்து தெரிவிக்கப்படும் நிலையில் சர்வதேச நீதிமன்றின் விசாரணை அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதற்கு சுவிட்சலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் மீதான தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமெரிக்காவை சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நீதிமன்ற விசாரணை அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மிகுந்த கவலை அளிக்கின்றன இந்த தடைகளை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது #அமெரிக்கா #சுவிட்சலாந்து #கண்டனம் #அல்கொய்தா  #சர்வதேசநீதிமன்றம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More