Home இந்தியா நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு போராட்டம்

நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு போராட்டம்

by admin

‘கொரோனா’ மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விபை;படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர்,மலர்,ஆனந்த்,ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கரைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து தகவல் தெரிவித்ததுடன் படகையும் மீனவர்கள் நால்வரையும் மீட்டு தருமாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை ;இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்க சொந்தமான சிறிய ரக ரோந்து கப்பல்கள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மீனவர்கள் தேடும் பணியை தீவிர படுத்துவதுடன், படகு இஞ்சின் கோளாறு காரணமாக இலங்கை கடற்பகுதிக்கு சென்றுள்ளனரா? என்பது குறித்து இலங்கை அரசிடம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மாயமான நான்கு மீனவர்களின் உறவினர்கள் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா மற்றும் மீன் பிடி தடை காலம் என 83 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் நடுக்கடலில் படகுடன் மாயமாகன சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #நடுக்கடல்  #படகு  #காணாமல்போன  #மீனவர்கள் #போராட்டம் #இராமேஸ்வரம்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More