உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் கத்திக்குத்து – மூவர் பலி


பிரித்தானியாவின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பூங்கா ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கண்ணில்பட்டவர்கள் மீது சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்தத் தாக்குதல் தீவிரவாதச் செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற காவல்துறையினர் இந்தத் தாக்குதலுக்கும் கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறித் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.  #பிரித்தானியா #கத்திக்குத்து #லிபியா #பூங்கா

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.