Home இலங்கை மைத்திரியிடம் வழங்கிய 5 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை…

மைத்திரியிடம் வழங்கிய 5 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை…

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச முஸ்லீம் அமைப்பு ஒன்றினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக நல மேம்பாட்டு நிறுவனமான ´செத்சசரண´ அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை டொன் நிசாந்த லோரன்ஸ் நேற்றையதினம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ளார்

செத்சசரண அமைப்பின் மூலம் எந்தெந்த ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது என ஆணைக்குழு வினவியமைக்கு பதிலளித்த அவர் கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து நிதியுதவி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் இரண்டு கட்டங்களாக நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் காயமடைந்தார்கள் குறி;த்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் 121 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் காயமடைந்தவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 260 பேர் காயமடைந்தாகவும் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தப்பட்டு 14 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் 37 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்களில் சிலர் சுகப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அருட் தந்தை ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிதி உதவிகள் குறித்து ஏற்கனவே அருட்தந்தையால் தெரிவிக்கப்பட்டமை குறித்து ஆணைக்குழு அதிகாரிகள் வினவியமைக்கு பதிலளித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்காக டுபாய் அரசினால் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் உதவியுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்பட்டதாகவும் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிதியுதவி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளர்h.

இது குறித்து தேடி பார்க்குமாறு பேராயர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அறிவித்தும் இதுவரையில் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை எனவும் அருட்தந்தை டொன் நிசாந்த லோரன்ஸ் ராமநாயக்க அடிகளார் மேலும் தெரிவித்தார். #உயிர்த்தஞாயிறு #டொலர்கள் #பாதிக்கப்பட்டவர்கள் #மைத்திரிபால #செத்சசரண

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More