Home இலங்கை மகேலவிடம் வாக்குமூலம் பதிவு

மகேலவிடம் வாக்குமூலம் பதிவு

by admin

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் இன்று முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜயவர்தன அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலே அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்கார நேற்றைய தினம் 9 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் இன்றையதினம் மகேல ஜயவர்தன வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவித்த மகேல தான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன். அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவது தனது பொறுப்பாகும். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார். #மகேலஜயவர்தன  #வாக்குமூலம்  #கிரிக்கெட் #ஆட்டநிர்ணயசதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More