Home இலங்கை மூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.

மூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.

by admin
பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்திற்கு இடையில் இன்று (2020.07.03) காலை தங்காலை கால்டன் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் மாத்திரம் இறக்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. துறைமுக தொழிற்சங்கம் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட காமினி லொக்குகே,அனைத்து தொழிற்சங்கங்கள் துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பிரதமருடன் இன்று காலை விசேட கலந்துரையாடல் மேற்கொண்டது. பாரந்தூக்கிகள் அனைத்தையும் துறைமுகத்தில் இறக்குவதற்கு கலந்துரையாடல் மேற்கொண்டு நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். அதேபோன்று இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொண்டு இது தொடர்பில் தீர்வு பெற்று தருவதற்கும் பிரதமர், தொழிற்சங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களும் பிரதமருடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது. துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் மூவர் பாரந்தூக்கிகள் மீது ஏறியுள்ளளனர்.

அவர்களை அதில் இருந்து கீழே இறக்கி கலந்துரையாடல் மேற்கொண்டு, இதற்காக தீர்வு பெற இணக்கப்பட்டாடு எட்டப்பட்டது. பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலாக காணப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
வர்த்தக வாணிபம் மற்றும் முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷாமல் சுமனரத்ன
நான் நினைக்கின்றேன் தொழிற்சங்க வரலாற்றில் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு மைல்கல்லாகவே நாங்கள் இதனை பார்க்க முடியும். அரசங்கத்தின் தொழிற்சங்கம் என்ற ரீதியில் எங்கள் நிறுவனத்தை பாதுகாக்க முடிந்தமை குறித்து நாங்கள் விசேடமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கலந்துரையாடலில் பிரதமருடன் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள முடிந்தது. பிரதமருடன் கலந்துரையாடினால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என எங்களுக்கு நம்பிக்கை இருந்தது .
சுமித் விஜேசிங்கவினாலேயே அந்த கலந்துரையாடலுக்கான வழியேற்படுத்தி கொடுக்கப்பட்டது. நாங்கள் மேற்கொண்ட அர்ப்பனிப்பிற்கு ஆதரவு வழங்கிய தொழிற்சங்க துறையின் அனைவருக்காகவும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்க போராட்டம் முடிவடைந்தது. எங்கள் போராட்டத்தின் வெற்றினை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இன்று இவ்விடத்திற்கு துறைமுக அதிகாரசபையின் அனைத்து தொழிற்சங்களும் வருகைத்தந்தது.
தொழிற்சங்க போராட்டத்திற்கு புதிய உயிர் கொடுத்தமை தொடர்பில் நாங்கள் பிரதமருக்கும், அமைச்சர் காமினி லொக்குகேவுக்கும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே

கிழக்கு முனையம் தொடர்பில் காணப்பட்ட சிக்கல்களை இன்றைய தினம் ஓரளவு தீர்த்துக்கொள்ள முடிந்தது. அதேபோன்று கிழக்கு முனையத்தை செயற்படுத்துவதற்கான செயற்பாடு வரை செல்வதே தொழிற்சங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது வரையில் கிழக்கு முனையத்திற்கு மூன்று பாரந்தூக்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பாரந்தூக்கிகளை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தமையினால் பாரியளவு கட்டணம் செலுத்த நேரிட்டுள்ளது. ஊழியர்கள் மூவர் பாரந்தூக்கிகளின் மீது ஏறி நின்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஊழியர்களின் உயிருக்கும் ஆபத்துக்கள் காணப்பட்டது. இது தொடர்பில் நாங்கள் அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம். அமைச்சருடனான கலந்துரையாடலில் தீர்வு பெற முடியாமல் போனமையினால் நாங்கள் பிரதமருடன் கலந்துரையாடல் மேற்கொண்டோம் .
இதன் போது எங்களுக்கு சாதகமான பதில் ஒன்று பெற்றுக் கொள்ள முடிந்தது. அதன் ஒரு முடிவாக வெற்றி பெற்றோம். அதன் ஒரு கட்டமாக பாரந்தூக்கிகளை இறக்குவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது. அந்த அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இந்த பாரந்தூக்கிகளை இயங்க வைப்பதற்கான செயற்பாடு நோக்கி செல்ல நேரிட்டுள்ளது. இதனால் நாங்கள் முதலாவது நடவடிக்கையை வென்றுள்ளோம். இரண்டாவது நடவடிக்கையை எதிர்வரும் நாட்களில் வெற்றி பெற செய்வதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானத்திற்கு வருவதற்கும், முனையத்தை செயற்பாட்டு முனையமாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள தயார்.
துறைமுகச் சேவைகள் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மகாகமகே
 
பிரதமரடன் கலந்துரையாடல் மேற்கொண்டு கிழக்கு முனையத்தின் பாரந்தூக்கிகள் தொடர்பில் அவசிமான ஆலோசனை பெற்றுக் கொண்டமை தொடர்பில் , துறைமுகச் சேவைகள் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பாரந்தூக்கிகளை கிழக்கு முனையத்தில் இறக்காமை தொடர்பில் நாங்கள் 12 நாட்களாக துறைமுகத்திற்குள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அதற்காக நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எங்கள் ஊழியர்கள் மூவர் மேலே ஏறி எதிர்ப்புவெளியிட்டனர். நேற்று நாங்கள் பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டோம். அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் தலையீட்டிற்கமைய அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் எங்களுக்கு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். மிகவும் சிறந்த முறையிலான கலந்துரையாடல் இந்த சந்தர்ப்பத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க உட்பட தொழிற்சங்களின் பிரதிநிதிகள் இணைந்து கொண்டிருந்தனர். #பிரதமர் #பாரந்தூக்கி  #துறைமுகம் #தொழிற்சங்கநடவடிக்கை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More