Home இலங்கை இயக்கச்சி குண்டுடிவடிப்பு – ஆசிரியை கைது

இயக்கச்சி குண்டுடிவடிப்பு – ஆசிரியை கைது

by admin


இயக்கச்சியில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் குறித்த வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3குண்டுகளும் கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள் சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவரின் மனைவியான ஆசிரியை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்த 43 வயதான தங்கராசா தேவதாசன் ( யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் முன்னாள் போராளி எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அங்கத்தவராகச் செயற்பட்டு வந்ததாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரது மனைவி இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாகவும் அவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #இயக்கச்சி #குண்டுடிவடிப்பு #ஆசிரியை #கைது #கரும்புலி  #முன்னாள்போராளி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More