Home இலங்கை மாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :

மாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :

by admin


சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் எனவும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னரே கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நபர்கள் உள்வாங்கப்படுகின்ற நிலையில் அங்கிருந்த ஒருவர் எவ்வாறு கொவிட் 19 தொற்றுக்குள்ளானார் என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகலும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.  #மாரவில  #சுயதனிமைப்படுத்தல்  #கொவிட்19  #கந்தகாடு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More