91
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த, இரு குழுவினருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனா் என தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டார்கள் எனவும் அவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய போதை புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கந்தகாடு #தனிமைப்படுத்தல்நிலையம் #மோதல்
Spread the love