Home இலங்கை மன்னாாில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மன்னாாில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

by admin
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தலைமன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலைமன்னார்  காவல்துறையினா்   மீட்டுள்ளனர்.
 தலைமன்னார் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட  கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.
கடற்படையினர் உடனடியாக  தலைமன்னார் காவல்துறையினருக்கு  தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் காவல்துறையினா்  குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு,மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். -மேலதிக விசாரணைகளை தலைமன்னார்  காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #மன்னார் #சடலம்  #கடற்கரை
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More