Home உலகம்   2 மாத ஆய்வுக்கு பின் அமெரிக்க விண்வெளிவீரர்கள்     பூமிக்கு  திரும்பியுள்ளனா்

  2 மாத ஆய்வுக்கு பின் அமெரிக்க விண்வெளிவீரர்கள்     பூமிக்கு  திரும்பியுள்ளனா்

by admin

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள்  சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வு மேற்கொண்ட பின்னா்   பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

கடந்த மே 31-ம்  திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ரொக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது.

  இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம் அமெரிக்காவின் புதிய வர்த்தகம் ஆரம்பமாகியுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து போக்குவரத்து தேவைகளுக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என தொிவிக்கப்படுகிறது.

சுமார் 21 மணி நேரம் பயணித்த இருவரும் அதிகாலை மெக்சிகோவின் வளைகுடா கடல்பகுதியில் தரையிறங்கியுள்ளனர். 17,500 மைல் வேகத்தில் வந்த பாராசூட் படிப்படியாக 15 மைல் வேகத்திற்கு குறைக்கப்பட்டது.
டிராகன் பாரசூட் தரையிறங்கியதும் படகு மூலம் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க வீரர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் முக்கியமான நாள், இந்த வெற்றியை நாம் கொண்டாடவேண்டும். வரும் காலங்களில் இன்னும் கடுமையான பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் என  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குவையின் ஷாட்வெல்  தெரிவித்துள்ளார்.

நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். #ஆய்வு  #அமெரிக்க #விண்வெளிவீரர்கள்  #பூமி #ஸ்பேஸ்எக்ஸ்  #நாசா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More