Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…

by admin

இலங்கையின்  அரசியல் வரலாற்றில் பாரிய அரசியல் புரட்சிக்கு வித்திட்டு 27,71,990 வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலமையகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,  இந்த மக்கள் ஆணையுடன் நாட்டின் வரலாற்றில் பாரிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

“சுற்றிவளைத்து கல் எறிந்த போது நம்மால் பலமான பயணமொன்றை ஆரம்பிக்க முடிந்தது. பொய்யை தோல்வியடைச் செய்து உண்மையை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்தது. குறுகிய காலத்திற்குள் நாம் இவ்வாறு மக்கள் பலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே, எமக்கு சிறந்த எதிர்காலப் பயணம் உள்ளதாக நான் நினைக்கின்றேன். அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு உறுதியான பயணத்தை தொடரவுள்ளோம்” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் உள்வாங்கப் போவதில்லை எனவும் அவர்  வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More