Home இலங்கை பிள்ளையான் அமைச்சராகிறார்?

பிள்ளையான் அமைச்சராகிறார்?

by admin


தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), கண்டியில் நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, அமைச்சர் பதவியை ஏற்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அவருக்கு எந்த பதவி வழங்கப்படும், அது அமைச்சரவை அந்தஸ்துடையதா? அல்லது அமைச்சரவை அந்தஸ்து அல்லாத பதவியாக என்பது குறித்து தெளிவில்லை எனவும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தின், அதி கூடிய 54,198 என்ற விருப்பு வாக்குகளைப் பெற்று, பிள்ளையான் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவ்வாறு சிறையில் இருந்தபடியே பாரிய வெற்றியை தனதாக்கியுள்ள பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறீலங்கா பொதுஜன பெரமுனவால், பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்த்தேசிய கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையான் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More