Home இந்தியா குடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது 

குடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது 

by admin

குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் நேற்று   தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து பெண்கள் சொத்து சட்டப்படி, ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்ததுடன் அவர்களால் குடும்ப சொத்தில் உரிமை கொண்டாட முடியாது காணப்பட்டது. பிறந்த வீட்டினால் வழங்கப்படும்  சீதனம் மட்டுமே பெண்களின் சொத்தாக கருதப்பட்டது .

இந்தநிலையில் 1956-ல் அமுல்ப்படுத்த்பட்ட  இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989-க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2015 மற்றும் 2018-ல் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்டரீதியான கேள்வி எழுந்தது.

இந்தநிலையில்  டெல்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக  உச்சநீதிமன்றில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  மீதான    விசாரணை முடிவடைந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

ஒரு இந்து குடும்பத்தில், அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு.

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் ஏதேனும்  நீதிமன்றங்களில்  வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவற்றை 6 மாதங்களுக்குள் அந்த  நீதிமன்றங்கள்  முடித்து வைக்க வேண்டும் என  நீதிபதிகள்  தொிவித்துள்ளனா். #பெண்களுக்கு  #சொத்தில் #சமஉரிமை   #உச்சநீதிமன்றம்  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More