Home இலங்கை கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீர் மரணம்!

by admin

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார். 


சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர் மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 
வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை அடுத்து நடைபெற்ற மரண விசாரணை நடைபெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  #கூலி #மரணம் #புத்தூர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More