Home இலங்கை காவல்துறையினா் சித்திரவதை புரிந்ததாக முச்சக்கர வண்டி சாரதி முறைப்பாடு!

காவல்துறையினா் சித்திரவதை புரிந்ததாக முச்சக்கர வண்டி சாரதி முறைப்பாடு!

by admin

சிவில் உடையில் வந்த காவல்துறை அதிகாரியுடன் முரண்பட்டார் என குற்றம் சுமத்தி , முச்சக்கர வண்டி சாரதியை யாழ்ப்பாண காவல்துறையினா் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். 
நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


வெளிமாவட்டத்திலிருந்து பேருந்தில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய நபர் ஒருவரிடம் , அப்பகுதியில் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடும் நபர் ஒருவர் முச்சக்கர வண்டியில் செல்வோமா என கேட்டுள்ளார். 


அந்நபர் வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்றதும், முச்சக்கர வண்டி சாரதியும் அடுத்த வாடிக்கையாளரை பிடிக்கும் நோக்குடன் பிறிதொரு நபரை அணுகி கேட்டுள்ளார். வேண்டாம் என கூறி சிறிது தூரம் சென்ற அவா் மீண்டும் திரும்பி வந்து முச்சக்கர வண்டி சாரதியுடன் முரண்பட்டுள்ளார். 


அதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்புக்கு செல்ல முயன்ற வேளை அருகிலிருந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி இருவரையும் சமாதானபடுத்த முனைந்துள்ளார். சிவில் உடையில் வந்த நபர் சமாதானப்படுத்த முனைந்த நபருடனும் முரன்பட்டுள்ளார். 
அதனால் இரு சாரதிகளும் அவ்விடத்தில் இருந்து விலகி யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர். அங்கு நடமாடும் சேவையில் இருந்த காவல்துறையினாிடம் சம்பவம் தொடர்பில் வாய் மொழி மூலம் முறையிட்டுள்ளனர். 

அதனை அடுத்து காவல்துறையினா் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இருவரையும் அழைத்து வந்த போது அங்கு இவர்களுடன் முரண்பட்ட சிவில் உடை தரித்த நபர் நின்றிருந்தார். 
அவரிடம் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்ட போது ,  தான் காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவில் கடமையாற்றும் காவல்துறைஅதிகாரி என தன்னை அடையாளப்படுத்திகொண்டு, முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக முறையிட்டுள்ளார். 


அதனை அடுத்து அந் நபருடன் முரண்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை காவல்துறையினா் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி  காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அதன் போது சிவில் உடையில் வந்திருந்த காவல்துறை அதிகாரியும் அந்த வாகனத்தில் ஏறி  காவல் நிலையம் சென்றுள்ளார். அதன் போது தன்னுடன் முரண்பட்ட சாரதியை வாகனத்தினுள் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். பின்னர் காவல்துறையினா் சாரதியை கால்நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்த போதிலும் அங்கு வைத்தும் சிவில் உடை தரித்த  காவல்துறை அதிகாரி கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த சாரதியை காவல்துறையினா்

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி , தன்னை காவல்துறையினா் சித்திரவதை புரிந்து தாக்குதல் மேற்கொண்டனர் என யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் த, கனகராஜிடம் முறையிட்டுள்ளார்.  #மனிதஉரிமைஆணைக்குழு #காவல்துறை #முச்சக்கரவண்டி #சாரதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More