Home இலங்கை உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சங்கானை விழிசிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் (வயது-32) என்பவரே உயிரிழந்தார்.

மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது எனவும் அதன் போதே மக்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்துந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் #உழவுஇயந்திரம் #குடும்பஸ்தர் #சங்கானை #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More