Home இலங்கை விஜயலட்சுமி தொண்டமான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை

விஜயலட்சுமி தொண்டமான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை

by admin

(க.கிஷாந்தன்)

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகளான விஜயலட்சுமி தொண்டமான் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று (25) நிராகரித்துள்ளது.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே அதற்கு மறுப்பு தெரிவித்து இ.தொ.காவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

” விஜயலட்சுமி தொண்டமானின் அரசியல் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இ.தொ.காவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் போலி தகவல் பரப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் இன்னும் வெளியாகிவில்லை. அது தொடர்பில் இ.தொ.கா. எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. எனவே, போலியான தகவல்களை நம்பவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். உரிய நேரத்தில் – உரிய முடிவுகளை எடுத்து – உரிய வகையில் மக்களுக்கு அறிவிக்கும் அரசியல் இயக்கமே இ.தொ.காவாகும்.” – என்றுள்ளது. #விஜயலட்சுமிதொண்டமான் #மாகாணசபைத்தேர்தல் #ஆறுமுகன் #இலங்கைத்தொழிலாளர்காங்கிரஸ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More