Home இலங்கை நாடாளுமன்றினதும், பிரதமரதும் அதிகாரங்கள் மீண்டும் டம்மியானால்? 2029 வரை பொறுமை காப்பார்களா?

நாடாளுமன்றினதும், பிரதமரதும் அதிகாரங்கள் மீண்டும் டம்மியானால்? 2029 வரை பொறுமை காப்பார்களா?

by admin


20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபினை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அது தொடர்பான வர்த்மானி அறிவித்தல் இன்று (03) வெளியிடப்படும் என அரசாங்க அச்சக பிரிவின் அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நேற்றைய தினம் (02.09.20) நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.


இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த 20அவது அரசியல் அமைப்புச் சீர் திருத்தத்தில், ஏற்கனவே 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 4 விடயங்கள் நீக்கப்பட மாட்டாது எனவும் ஏனைய அம்சங்கள் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

1) தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
2) ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடம்.
3) நாடாளுமன்றின் ஆட்சிக்காலம் 5 வருடம்.
4) ஒருவர் இரண்டு முறைகளே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்.


எனினும் 19ல் குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம், அரசியல் அமைப்பு பேரவை, ஆணைக்குழுக்கல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்னோர் தேர்தலில் பொட்டியிட முடியாது போன்ற முக்கிய விடயங்கள் நீக்கப்பட்ட அல்லது வலுவிழக்கச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதம மந்திரி, நாடாளுமன்றத்திற்கு அதிகரிக்கப்பட்டு இருந்த அதிகாரங்களும் மீண்டும் வலுவிழக்கச் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


குறிப்பாக நாடாளுமன்றின் பதவிக் காலம் 5 வருடம் என்ற சரத்து நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ள போதும் 19ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு அரை வருடங்கள் வரை ஜனாதிபதி நாடாளுமன்றை கலைக்க முடியாது என கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடருமா நீக்கப்படுமா என்ற விடயம் இதுவரை தெளிவாகவில்லை.


இந்த நிலையில் 19ஆம் திருத்தம் நீக்கப்படுவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தரப்பிற்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தரப்பிற்கும் இடையில் சில அதிர்ப்த்திகள் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

காரணம் 2 தடவைகளே ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியும் என்ற நிலை தொடர்ந்தால், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இனி ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது.


ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டால், நாடாளுமன்றமும், பிரதமரும் மீண்டும் டம்மிகளாக மாற்றப்படும் நிலை உருவாகும். இதனை அடுத்துவரும் 10 வருடங்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் விருப்புடன் ஏற்றுக்கொள்வார்களா?

காரணம் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவே போட்டியிடும் நிலை உருவாகும். 2029 வரை அவரது அதி உயர் அதிகாரம் நீடித்திருக்கும். அதனால் இதனை தற்போதைய பிரதமரும் அமைச்சர்களும், அவர்கள் சார்பானவர்களும் அனுமதிப்பார்களா? கேளிவிகளும், விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More