Home இலங்கை மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 103 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 103 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

by admin


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் உள்ள  வேலையற்ற  பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலைமையில் மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (4) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலக பிரிவில் பல்கலைக் கழக கல்வி மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதல் உள்ள வேலையற்ற 103 பட்டதாரிகளுக்கான நியமனங்கள்  வழங்கி வைக்கப்படது.
மேலும் அவர்களுக்கான நியமன பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான தெளிவு படுத்தலும் வழங்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் அதிகாரி, பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக அதிகாரி,பதிவாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது. #மன்னார் #பட்டதாரிகள் #நியமனக்கடிதம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More