Home இந்தியா இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44.65 லட்சமாக உயர்வு – 24 மணித்தியாலத்தில் 1,172 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44.65 லட்சமாக உயர்வு – 24 மணித்தியாலத்தில் 1,172 பேர் பலி

by admin

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44.65 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34.71 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசின் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரம் என்ற அளவில் உள்ள அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகாித்து வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்தை கடந்து பு 44,65,864 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 95,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,172 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,062 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,98,844-ல் இருந்து 34,71,784 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 72939 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 919018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழப்பு 1.68 சதவீதமாக குறைந்துள்ளதுடன் குணமடைந்தோர் விகிதம் 77.74 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #கொரோனா #உயர்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More